Monday, August 22, 2011

நினைவு என்னை வென்றது...

ஆகாயமும் என்னை தள்ளி நின்றது..
ஆவேசமும் என்னை கிள்ளி எரிந்தது...
அலைகள் கூட என்னை அல்ல மறுத்தது....
அசல்கள் கூட எனக்கு நகல்கள் ஆனது....
அசைகின்ற பொருள்கள் கூட அசைய மறுத்தது....
அசையா பொருள்கள் கூட அசைய வெறுத்தது...
பகல் வந்த பின்னாலும் இரவு துடித்தது...
இரவு வந்த போதிலும் பகல் தடுக்க நினைத்தது....
எல்லா கொடுமை காட்டிலும் என்னை தனிமை கொன்றது...
தனிமை என்னை கொன்ற போதிலும் அவளின் நினைவு என்னை வென்றது...

Saturday, August 20, 2011

இருந்து விட்டதா...


இதயம் இணைந்து விட்டதா....
இல்லை என் இதயம் கனத்து விட்டதா...

என் இதயம் இருண்டு விட்டதா...
அதன் மேல் உன் நிழல் பட்டு விட்டதா ...

என் இதயம் பறந்து விட்டதா..
உன் மேனி என்மேல் பட்டு விட்டதா...

உன் சிரிப்பு கொட்டி விட்டதா...
அதை சேர்த்து என் இதய சுவர் கட்டி விட்டதா....

உன் பார்வை பட்டு விட்டதா...
அதில் என் உயிர் கேட்டு விட்டதா....

தென்றல் என்னை கடந்து விட்டதா..
அதில் உன் கூந்தல் என் இதயத்தை கட்டி விட்டதா..

என் நிழல் என்னை திட்டி விட்டதா..
உன் நிழல் என்னை விட்டு பிரிந்து விட்டதா...

என் உயிர் உன்னுடன் கலந்து விட்டதா ...
இல்லை உன் உயிர் என்னுடன் இருந்து விட்டதா...


என் உயிர் நீ என்று.....

ஒரு பார்வையில் நான் சாகுறேனடி...
மறுபார்வையில் நான் மீல்கிறேனடி...
உன் ஒரு மூச்சு காற்றுக்காக நான் வாழ்கிறேனடி...
மறு பேச்சுக்காக நான் வீள்கிறேனடி...
ஒருநாள் கூட உன்னை பார்க்காமல் நான்
சிறு நாய்குட்டியாக தெரு முழுவதும் உன்னை தேடி நான் அலைகிறேனடி...
மின் அஞ்சல் எனக்கு இல்லையடி...உன் கண் அஞ்சலில் சொல்லிவிடு...
என் உயிர் நீ என்று.....


Wednesday, August 10, 2011

இல்லை... இல்லை...


தென்றலை தேடி பார்த்தேன் அது துளைந்து விட்டதா ? இல்லை... இல்லை...
அது உன் கூந்தல் தீண்டும் போதுதான் தெரிகிறது அது உனது அருகில் இருக்கிறது.....என்று...
என் நிழலை தேடி பார்த்தேன் அது மறைந்து விட்டதா ? இல்லை..இல்லை..
உன் பின்னாலே வந்து கொண்டே இருக்கிறது ...என்று...
என் இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டதா? இல்லை..இல்லை..
அது உன்னை பற்றி சிந்தனையில் ஆழ்ந்து விட்டது ..என்று...
உன் சிரிப்பு சிந்தி விட்டதா? இல்லை ....இல்லை..
சிந்திய தேனை சேகரித்து வைக்கும் எறும்பாக உன் சிரிப்பை என் மனம் சேகரித்து விட்டதே என்று..
என் கண்கள் ஒளியை இழந்து விட்டதா? இல்லை..இல்லை..
அது உன் அழகில் மறைந்து விட்டது என்று.....
என் உயிர் பிரிந்து விட்டதா?இல்லை..இல்லை..
அது உனக்காக இன்னும் என்னுள் இருந்து கொண்டு இருக்கிறது என்று.....