Tuesday, June 28, 2011

ஊன்றுகோல்


உன் நினைவு கொடிகளுக்காக நான் தரும் ஒரு ஊன்றுகோல்
என் இதயம் ...

Friday, June 24, 2011

உன் சேலையின் மீது....


எப்போதுமே நீ சுடிதாரில் சுற்றித்திரியும் உன்னை...
ஒரு நாள் சேலையில் பார்த்த உடனே எனக்கு கோவம் வந்து விட்டது..
உன் சேலையின் மீது....
உன் அழகை காட்டிலும் சேலையில் அதை விட அழகாக இருப்பதால்......!!!!!!!

தினசரி காலண்டர்....


தினசரி காலண்டரை இருந்து கிழிக்கும் தேதியை கூட இப்போது எடுத்து பத்திர படுத்தி வைக்கிறேன்....
ஏன் தெரியுமா? அது கூட உன்னை ஒவ்வொறு நாளும் பார்க்க போகிறேன் என்று நாயபக படுத்துகிறது ...

நாள் குறிப்பில்


என் நாள் குறிப்பில் நான் எழுதிய...ஒரே வார்த்தை அவள் பெயர்.....

அட்சய பாத்திரமா?

உன் நினைவுகளை அழிக்க பார்கிறேன்...
ஆனால் அது வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது...
உன் நினைவு என்ன? அட்சய பாத்திரமா? இல்லை அதிசய பத்திரமா?

Tuesday, June 21, 2011

சில நொடிகள்


சில நொடிகள் வந்து சென்ற உன் நினைவுகளை
பல நாட்கள் கற்பனை செய்து கொண்டு இருக்கிறேன்.
நெடு நாட்களில்.... நீ சில நாட்களே
உன்னை பார்க்க சில நொடிகளே
தந்து விட்டு செல்கிறாய்....
எப்போது என்னுடன் பலநாட்கள் இருப்பாய்..
அதனால் என்னவோ சில நாட்கள் கூட எனக்கு பல யுகங்கள் ஆக
மாறுகிறது.....

அடைக்கலம்

உன் இடை விடாத பேச்சு...
என் இதயத்தின் துடிப்பை கொஞ்ச நேரம்
தடைபெற செய்தது....
உன் பேச்சுக்கு தடை பெற்றதா?
இல்லை உன் மூச்சுக்கு குடை பிடித்ததா?
எனக்கு மட்டுமே தெரியும் அந்த ரகசியம்?
உன் அன்பிற்கு எப்போதும் என் இதயம்
அடைக்கலம் கொடுபதினால் தானே
இந்த மாற்றம்?

Monday, June 20, 2011

பாராத போர்

எனக்கும் அவளுக்கும் பாரத போர் நடக்கிறதா? பாராத போர் நடக்கிறதா?
தெரியவில்லை..
ஒவ்வொரு முறையும் என் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வென்று
முன்னேறிக்கொண்டே வருகிறாள்......

மறுஜென்மம்


நீ வருவதற்கு முன் ஒரு நொடி கூட ஒரு ஜென்மம் ஆனதடி...
நீ வந்த பின்பு எனக்கு அந்த நொடி கூட மறுஜென்மம் ஆனதடி....

Thursday, June 9, 2011

நிலவு

நிலவு அழகா? இல்லை நீ அழகா?
நீ இல்லாத போது தான் நிலவு அழகு!