Thursday, October 27, 2011

தற்காப்புக்காக ஒரு கொலை........


அவள் நினைவு ஆனது என் நெஞ்சில்
ஆழ மரம்.....

அவள் தினமும் ஆடுகிறாள் அதன்
விழுதில்.......

எத்தனையோ முறை அடிவிட்டேன் அவளோடு
கனவில்.....

பித்தனாக மாறிவிட்டேன் அவள்
இல்லாத இந்த உலகில்....

தினம் தினம் இறகிறேன் ஒரு நொடியில்...

ஒரு கோடி காதலர்கள் இருப்பார்களா?
இந்த உலகில்....

அவரை பார்த்து நான் கேட்கிறேன்
ஒரு பதிலில்.....

அவளோடு போகிறேன் இந்த
இரவில்......

தற்கொலை செய்யவில்லை....
தற்காப்புக்காக ஒரு கொலை........

Friday, October 14, 2011

குதிரை..........


கடிவாளம் இல்லாத குதிரை போல்....
குதிக்கிறேன்...
என்னை அவள் கடந்து போகும் போது......

குறு...குறு.....பார்வை......


உன் மௌன கத்தியில்
என்னை கூறு இட்டு கொன்றவளே....

உன் குறு...குறு.....பார்வையில்
என் இதயத்தை குத்தி கிழித்தவளே....

உன் ஓர பார்வையில்.....
என்னை இந்த உலகத்தில்
ஒரு ஓரத்தில் தள்ளியவளே....

தவம் இருந்து.....
இறைவனிடம் ஒரு வரம் கேட்பேன்...
என்னவென்று தெரியுமா?
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________

இந்த உலகில் நான் மட்டுமே
அவளுக்கு...................................
அழகாக தெரியவேண்டும் என்று.....

Thursday, October 13, 2011

உயிரினம்.....


தத்தி...... தத்தி......
தாவுதடி ஒரு உயிரினம்.....

தர..... தர.....
சுமகுதடி ஒரு உயிரினம்.....

தாகம் தான்................
எடுக்கவில்லை இந்த
உயிரினம்.....

வயிறு இருந்தாலும்
பசியே எடுக்காத
இந்த உயிரினம்.....

பாசத்துக்கு மட்டுமே
கட்டுப்படும்
இந்த உயிரினம்.....

அழகாக.....
அழகாகவே இருந்துடா
இந்த உயிரினம்.....

ஆட்களை அழகாக
கொள்ளும்
இந்த உயிரினம்.....

உலகமே வந்ததுக்கு
காரணம்........
இந்த உயிரினம்.....

நான் சொல்லாமலே......
உங்களுக்கே தெரியும்
இந்த உயிரினம்.....

காதல் வந்தாலே
தள்ளாடும்.............
இந்த உயிரினம்.....

இதயம்..............

உன் காதல் தானடி....


கண் தெரியா தென்றல் கூட
உன்னை தொட இடம் தருகிறாய்...

கண்ணுக்கு தெரிந்த என்னை மட்டும்
நெருங்கும் போது முறைக்கிறாய்....

நீ பார்த்த எல்லா ஆண்களை விட
நான் நிகர் இல்லை....

நான் பார்த்த எல்லா பெண்களும்
உனக்கு நிகர் இல்லை...

எல்லா கவிதைக்கும்
ஒரு பெண்தான் காரணம்...

நான் எழுதும் இந்த கவிதைக்கு
நீதானே சாதனம்....

உன் ஒரு வார்த்தைக்கு
இந்த உயிர் எல்லாம்
ஒரு
சாதா ரணம்.....

உன்னை போல் நான் அழகாக
ஆக முடியமா?
தெரியவில்லை....

ஆனால் என் இதயத்தை
உனக்காகவே அழகாக்க
முடியமே!

காதலுக்கே கண் இல்லை என்பார்கள்...
ஆனால் பெண்ணே....
என்
கண்ணே.............
உன் காதல் தானடி....

Wednesday, October 12, 2011

புதியது.....


ஒவ்வொரு விடியலுக்கும்.....
சூரியன் புதியது.....

ஒவ்வொரு பூக்களுக்கும்
மலர்வது புதியது.....

ஒவ்வொரு மழைகளுக்கும்
துளிகள் புதியது....

ஒவ்வொரு இரவுகளும்
கனவுகள் புதியது....

ஒவ்வொரு உன் வரவுகளுக்கும்
என் காதல் புதியது.......

Monday, October 3, 2011

நீ எப்போதும் மருந்தாக.....


காதலை சுமந்து வந்தேன்
பொதி மாடாக....

கனவுகளில் மிதந்து வந்தேன்
காற்றாக.....

கற்பனையில் இருந்து வந்தேன்
சில அலையாக....

கடும் இரவில் நினைத்து வந்தேன்
சிறு ஒளியாக....

அவள் கால் படும் இடத்தில இருந்து வந்தேன்
அவள் தடமாக..............

அவள் காதல் என்னை பாடாய் படுத்துகிறது
குரங்காக....

காயம் இட்ட பெண்ணே என் இதயத்திருக்கு
நீ எப்போதும் மருந்தாக.....

காதல்.....


பருந்திடம் தப்பிக்க எலி....
பாம்பிடம் போய் சிக்கியது...
(காதல்)

அவள் வாழ்வு....


வண்ணம் இல்லாத வானவில்
என் வாழ்வு....

வான் எங்கும் ஒரே நட்சத்திரம்
அவள் வாழ்வில்......

பிம்பம்...


உன் பிம்பம்...பெண் பிம்பம்...
நீ பார்த்த பின்பும்...
என் உயிர் என்னை விட்டு போகும்...

நீ என் வாழ்வில் வந்த பின்பும்....
என் மனதில் ஒரு மாற்றம்...

உன் கருவிழி பார்த்தபின்பும்...
என் நெஞ்சில் இந்த இடமாற்றம்....

உன்னை கடைசியில் கொண்டு சென்ற பின்பும்.....
உன் மீது படும் விறகாக வேண்டும்.....

Sunday, October 2, 2011

ஒரு நாள் வாழ்வில்....




ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டது பூக்கள்..............

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை தொட ஆசைப்பட்டது வண்ணத்து பூச்சிகள்....

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை சீண்ட ஆசைப்பட்டது மழைதுளிகள்......

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை மேனியை சீண்ட ஆசைப்பட்டது அலைகள்....

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை பற்றி நினைக்க ஆசைப்பட்டது கனவுகள்.......

பலநாள் வாழ்வில்.....
ஒரு தடவை, ஒரு நிமிடம் அவளுடன் வாழ ஆசைப்பட்டேன் நான்....

Saturday, October 1, 2011

வாசிக்க மட்டுமே முடியும்.....


காற்றை சுவாசிக்க முடியவில்லை...
உன் காதலை நேசிக்க மட்டுமே முடிகிறது...

கற்பனையாக யோசிக்க முடியவில்லை....
உன் காதலை சுவாசிக்க மட்டுமே முடிகிறது...

உன் காதலை என்னால் யாசிக்க முடியவில்லை....
என் உயிரை உனக்காக வாசிக்க மட்டுமே முடியும்.....