Sunday, November 27, 2011

குருவி கூடு..


என் இதயம் குருவி கூடு..
கூடில் இட்டுவிட்டால் முட்டை.....

தினமும் இரவில்
அவளின் கற்பனையை கனவில் இட்டு....
அடைகாத்து வந்தேன் தினமும் கஷ்டப்பட்டு.....

காதல் என்ற குருவி வந்து..
முளைதனவே இறகு கொஞ்சம்...

மறதனவே குருவி கூட்டை...
ஐயோ பாவம் அந்த குருவி கூடு...

Friday, November 18, 2011

காணாத என் இதயம்




அவள் கண்கள் பட்ட விண்மீன்கள்
கரைந்து போனதோ?

அவள் கால் பட்ட இடங்கள் எல்லாம்
எரிந்து போனதோ?

அவள் தென்பட்ட திசைகள் எல்லாம்
மாறி போனதோ?

அவளை தினமும் தொட்ட தென்றல் இன்று
மறைந்து போனதோ?

அவள் இல்லாத இன்று கருமேகம்
கூட கண்ணீர் சிந்துகிறதோ ?

காணாத என் இதயம் கூட
இன்று என் உயிரை கட்டி விட்டதோ!

Tuesday, November 15, 2011

உன் விழி..


உன் விழி..
எனக்கு உயிர் வலி...

உன் ஒரு சிரிப்பு...
என் இதயத்துக்கு நானே வைத்துகொண்ட நெருப்பு....

உன் ஒரு அசைவு..
என் நாடி எங்கும் உன்னுடைய பிம்பத்தின் கசிவு.....

என் உசுரு....
உனக்கு நான் கொடுகின்ற பரிசு......