Friday, November 18, 2011

காணாத என் இதயம்




அவள் கண்கள் பட்ட விண்மீன்கள்
கரைந்து போனதோ?

அவள் கால் பட்ட இடங்கள் எல்லாம்
எரிந்து போனதோ?

அவள் தென்பட்ட திசைகள் எல்லாம்
மாறி போனதோ?

அவளை தினமும் தொட்ட தென்றல் இன்று
மறைந்து போனதோ?

அவள் இல்லாத இன்று கருமேகம்
கூட கண்ணீர் சிந்துகிறதோ ?

காணாத என் இதயம் கூட
இன்று என் உயிரை கட்டி விட்டதோ!

No comments: