Wednesday, December 21, 2011

விழிகள் நூறு வேண்டும்....


பறக்க, பறக்க, பல இறகு வேண்டும்,
பார்க்க, பார்க்க விழிகள் நூறு வேண்டும்....
பேச, பேச இதழ்கள் பல கோடி வேண்டும்....
வாழ, வாழ அவள் மட்டுமே போதும்......

Friday, December 16, 2011

நாய் மட்டுமே.......நானே !



அவள் போகும் பாதை தேடி சென்றேன்...
அவளை பார்த்த பின்பு என் வழியை மறந்து நின்றேன்.....

அவள் காதல் பிச்சை போட்ட பின்னே....
நான் பின்னே சென்று விட்டேன் நாயை போல நானே!

போனபின்பு தெரிந்து கொண்டேன்..ஐயோ பெண்ணே!
அவளை காவல் காக்கும் நாய் மட்டுமே.......நானே !

நான் ஓடிய அந்த வேலை..


இரவு முழ்கும் வேலை...
இதழ்களில் வறுடும் வேலை..

என் இதயத்தில் ஒரு சோலை...
இதயமெங்கும் கட்டிவிட்டால் அவள் சேலை...

அவள் கற்பனையில் வாழ்ந்து வந்தேன்...சில வேலை...

தினம்... தினம்....என்னை பார்க்கும் அந்த வேலை...
நான் காதல் சொல்ல முடியாமல் போகிறது சில வேலை...

தாறுமாறாக நான் ஓடிய அந்த வேலை..

என்னை தட்டி கொடுத்து.......
தைரியமாக செல்ல சொன்னால்
அந்த பாவை....

Sunday, November 27, 2011

குருவி கூடு..


என் இதயம் குருவி கூடு..
கூடில் இட்டுவிட்டால் முட்டை.....

தினமும் இரவில்
அவளின் கற்பனையை கனவில் இட்டு....
அடைகாத்து வந்தேன் தினமும் கஷ்டப்பட்டு.....

காதல் என்ற குருவி வந்து..
முளைதனவே இறகு கொஞ்சம்...

மறதனவே குருவி கூட்டை...
ஐயோ பாவம் அந்த குருவி கூடு...

Friday, November 18, 2011

காணாத என் இதயம்




அவள் கண்கள் பட்ட விண்மீன்கள்
கரைந்து போனதோ?

அவள் கால் பட்ட இடங்கள் எல்லாம்
எரிந்து போனதோ?

அவள் தென்பட்ட திசைகள் எல்லாம்
மாறி போனதோ?

அவளை தினமும் தொட்ட தென்றல் இன்று
மறைந்து போனதோ?

அவள் இல்லாத இன்று கருமேகம்
கூட கண்ணீர் சிந்துகிறதோ ?

காணாத என் இதயம் கூட
இன்று என் உயிரை கட்டி விட்டதோ!

Tuesday, November 15, 2011

உன் விழி..


உன் விழி..
எனக்கு உயிர் வலி...

உன் ஒரு சிரிப்பு...
என் இதயத்துக்கு நானே வைத்துகொண்ட நெருப்பு....

உன் ஒரு அசைவு..
என் நாடி எங்கும் உன்னுடைய பிம்பத்தின் கசிவு.....

என் உசுரு....
உனக்கு நான் கொடுகின்ற பரிசு......

Thursday, October 27, 2011

தற்காப்புக்காக ஒரு கொலை........


அவள் நினைவு ஆனது என் நெஞ்சில்
ஆழ மரம்.....

அவள் தினமும் ஆடுகிறாள் அதன்
விழுதில்.......

எத்தனையோ முறை அடிவிட்டேன் அவளோடு
கனவில்.....

பித்தனாக மாறிவிட்டேன் அவள்
இல்லாத இந்த உலகில்....

தினம் தினம் இறகிறேன் ஒரு நொடியில்...

ஒரு கோடி காதலர்கள் இருப்பார்களா?
இந்த உலகில்....

அவரை பார்த்து நான் கேட்கிறேன்
ஒரு பதிலில்.....

அவளோடு போகிறேன் இந்த
இரவில்......

தற்கொலை செய்யவில்லை....
தற்காப்புக்காக ஒரு கொலை........

Friday, October 14, 2011

குதிரை..........


கடிவாளம் இல்லாத குதிரை போல்....
குதிக்கிறேன்...
என்னை அவள் கடந்து போகும் போது......

குறு...குறு.....பார்வை......


உன் மௌன கத்தியில்
என்னை கூறு இட்டு கொன்றவளே....

உன் குறு...குறு.....பார்வையில்
என் இதயத்தை குத்தி கிழித்தவளே....

உன் ஓர பார்வையில்.....
என்னை இந்த உலகத்தில்
ஒரு ஓரத்தில் தள்ளியவளே....

தவம் இருந்து.....
இறைவனிடம் ஒரு வரம் கேட்பேன்...
என்னவென்று தெரியுமா?
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________
_____________________

இந்த உலகில் நான் மட்டுமே
அவளுக்கு...................................
அழகாக தெரியவேண்டும் என்று.....

Thursday, October 13, 2011

உயிரினம்.....


தத்தி...... தத்தி......
தாவுதடி ஒரு உயிரினம்.....

தர..... தர.....
சுமகுதடி ஒரு உயிரினம்.....

தாகம் தான்................
எடுக்கவில்லை இந்த
உயிரினம்.....

வயிறு இருந்தாலும்
பசியே எடுக்காத
இந்த உயிரினம்.....

பாசத்துக்கு மட்டுமே
கட்டுப்படும்
இந்த உயிரினம்.....

அழகாக.....
அழகாகவே இருந்துடா
இந்த உயிரினம்.....

ஆட்களை அழகாக
கொள்ளும்
இந்த உயிரினம்.....

உலகமே வந்ததுக்கு
காரணம்........
இந்த உயிரினம்.....

நான் சொல்லாமலே......
உங்களுக்கே தெரியும்
இந்த உயிரினம்.....

காதல் வந்தாலே
தள்ளாடும்.............
இந்த உயிரினம்.....

இதயம்..............

உன் காதல் தானடி....


கண் தெரியா தென்றல் கூட
உன்னை தொட இடம் தருகிறாய்...

கண்ணுக்கு தெரிந்த என்னை மட்டும்
நெருங்கும் போது முறைக்கிறாய்....

நீ பார்த்த எல்லா ஆண்களை விட
நான் நிகர் இல்லை....

நான் பார்த்த எல்லா பெண்களும்
உனக்கு நிகர் இல்லை...

எல்லா கவிதைக்கும்
ஒரு பெண்தான் காரணம்...

நான் எழுதும் இந்த கவிதைக்கு
நீதானே சாதனம்....

உன் ஒரு வார்த்தைக்கு
இந்த உயிர் எல்லாம்
ஒரு
சாதா ரணம்.....

உன்னை போல் நான் அழகாக
ஆக முடியமா?
தெரியவில்லை....

ஆனால் என் இதயத்தை
உனக்காகவே அழகாக்க
முடியமே!

காதலுக்கே கண் இல்லை என்பார்கள்...
ஆனால் பெண்ணே....
என்
கண்ணே.............
உன் காதல் தானடி....

Wednesday, October 12, 2011

புதியது.....


ஒவ்வொரு விடியலுக்கும்.....
சூரியன் புதியது.....

ஒவ்வொரு பூக்களுக்கும்
மலர்வது புதியது.....

ஒவ்வொரு மழைகளுக்கும்
துளிகள் புதியது....

ஒவ்வொரு இரவுகளும்
கனவுகள் புதியது....

ஒவ்வொரு உன் வரவுகளுக்கும்
என் காதல் புதியது.......

Monday, October 3, 2011

நீ எப்போதும் மருந்தாக.....


காதலை சுமந்து வந்தேன்
பொதி மாடாக....

கனவுகளில் மிதந்து வந்தேன்
காற்றாக.....

கற்பனையில் இருந்து வந்தேன்
சில அலையாக....

கடும் இரவில் நினைத்து வந்தேன்
சிறு ஒளியாக....

அவள் கால் படும் இடத்தில இருந்து வந்தேன்
அவள் தடமாக..............

அவள் காதல் என்னை பாடாய் படுத்துகிறது
குரங்காக....

காயம் இட்ட பெண்ணே என் இதயத்திருக்கு
நீ எப்போதும் மருந்தாக.....

காதல்.....


பருந்திடம் தப்பிக்க எலி....
பாம்பிடம் போய் சிக்கியது...
(காதல்)

அவள் வாழ்வு....


வண்ணம் இல்லாத வானவில்
என் வாழ்வு....

வான் எங்கும் ஒரே நட்சத்திரம்
அவள் வாழ்வில்......

பிம்பம்...


உன் பிம்பம்...பெண் பிம்பம்...
நீ பார்த்த பின்பும்...
என் உயிர் என்னை விட்டு போகும்...

நீ என் வாழ்வில் வந்த பின்பும்....
என் மனதில் ஒரு மாற்றம்...

உன் கருவிழி பார்த்தபின்பும்...
என் நெஞ்சில் இந்த இடமாற்றம்....

உன்னை கடைசியில் கொண்டு சென்ற பின்பும்.....
உன் மீது படும் விறகாக வேண்டும்.....

Sunday, October 2, 2011

ஒரு நாள் வாழ்வில்....




ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை பார்க்க ஆசைப்பட்டது பூக்கள்..............

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை தொட ஆசைப்பட்டது வண்ணத்து பூச்சிகள்....

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை சீண்ட ஆசைப்பட்டது மழைதுளிகள்......

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை மேனியை சீண்ட ஆசைப்பட்டது அலைகள்....

ஒரு நாள் வாழ்வில்....
ஒரு தடவை அவளை பற்றி நினைக்க ஆசைப்பட்டது கனவுகள்.......

பலநாள் வாழ்வில்.....
ஒரு தடவை, ஒரு நிமிடம் அவளுடன் வாழ ஆசைப்பட்டேன் நான்....

Saturday, October 1, 2011

வாசிக்க மட்டுமே முடியும்.....


காற்றை சுவாசிக்க முடியவில்லை...
உன் காதலை நேசிக்க மட்டுமே முடிகிறது...

கற்பனையாக யோசிக்க முடியவில்லை....
உன் காதலை சுவாசிக்க மட்டுமே முடிகிறது...

உன் காதலை என்னால் யாசிக்க முடியவில்லை....
என் உயிரை உனக்காக வாசிக்க மட்டுமே முடியும்.....

Thursday, September 29, 2011

உயிரை திருப்பி கொடுத்துவிடு........

உன் ஒவ்வொரு சினுகளுக்கும்
என் இதயத்தை சிதற வைகிறாய் .....

நீ சிரிக்கும் போது உன் கன்னக்குளியில்
என் உயிரை போட்டு முல்கடிகிறாய்...

உன் கத்திமுனை பார்வையில்
தினம் தினம் என்னை காய படுத்துகிறாய்......

ஒருமுறை உன்னை பார்க்காமல் இருந்தாலும்...
பலமுறை இறகிறேனடி.....

தினம் வந்துவிடு....
என் உயிரை திருப்பி கொடுத்துவிடு........

முடிவில்லா தூரம்......


பல நேரம்..நீ தூரம்
சில தூரம்...எனக்கு பல நேரம்...

நீ என் அருகில் இருக்கும் போது...
எனக்கு போகவில்லை நேரம்...

நீ போன பின்பு எனக்கு
நேரம் ஆனது நெடும் தூரம்...

நீ தூரம் இருபதினால்
எப்போதுமே உன் நினைவோடு பல நேரம்...

பல நேரம் உன்னுடன்
வாழ்கை பயணம் போகவேண்டும் முடிவில்லா தூரம்......

Tuesday, September 27, 2011

காதல் மொழி...


கண்ணில் காதல் மொழி...
பேச முடியுமா?
முடியும்.......
அவள் கண்ணில்.....

கொலை..


கத்தி இன்றி...
ரத்தம் இன்றி...
ஒரு கொலை...
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\காதல்....\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
மனம் போகும் போக்கில்
போய் கொண்டு இருத்த நான்....
இப்போது அவள் மனம் போகும் பாதையில்
போய் கொண்டு இருக்கிறேன்.....

Friday, September 9, 2011

வேண்டாம்...போதும்...........


சுவாசிக்க காற்று வேண்டாம்..
அவள் காதல் போதும்...........
வாசிக்க கவிதை வேண்டாம்..
அவள் பெயர் போதும்...
நேசிக்க பலபேர் வேண்டாம்...
அவள் ஒருத்தி போதும்...
யாசிக்க கடவுள் வேண்டாம்..
அவள் காதல் போதும்...

Thursday, September 8, 2011

உயிர் மொத்தம்.........


நித்தம் .... நித்தம் ....உன் நினைவுகளோடு ஒரு யுத்தம்...
சத்தம்.....சத்தம்.....எப்போதும் உன் சிரிப்பின் சத்தம்...
கத்தும்...... கத்தும்.....நீ வந்து போன பின்னும் என் இதயம் கத்தும்...
மொத்தம் மொத்தம்.... என் மூச்சு உள்ளவரை உன் காதலுக்கு என் உயிர் மொத்தம்.........

எது உனக்கு அழகு


ஒரு சிரிப்பு, சிறு கோவம், எப்போதாவது வெட்கம்
இதில் எது உனக்கு அழகு என்று என்னால் சொல்ல முடிய வில்லை பெண்ணே!
ஒவ்வொரு செய்கையிலும் புதுவித அழகோடு இருகிறாய்....
இது காதல் செய்யவதினால் வந்த மாற்றமோ...!
இல்லை பெண்களுகே உள்ளே உண்மை தோற்றமோ...!
எனக்கு புரியவில்லை பெண்ணே!

Tuesday, September 6, 2011

குரங்கு போல் தாவும் என் மனதுக்கு....
என்றும் அசையாமல் இருக்கும் மதில் சுவர் நீதானடி...
நான் பார்த்த மொத்த அதிசயத்தில் நீ மட்டும் தனித்துவம் தானடி...
ஒளி கூட உடுருவாத என் இதயத்தில் எப்போதும்
ஒளியாக இருப்பது உன் நினைவு தானடி...
உயிர் இருக்கும் வரை நான் செபிக்கும் ஒரே பெயர் உனது பெயர் தானடி...

Monday, September 5, 2011

எப்போதும் நீ..

நிலவுக்கு வெளிச்சம் நீ...
நீருக்கு தாகம் நீ..
வெயிலுக்கு வெப்பம் நீ...
காற்றுக்கு தென்றல் நீ...
காதலுக்கு சொற்பம் நீ..
காயத்துக்கு மருந்து நீ..
மலருக்கு மகரந்தம் நீ..
என் மனதுக்கு எப்போதும் நீ..நீ.......நீ...............

Monday, August 22, 2011

நினைவு என்னை வென்றது...

ஆகாயமும் என்னை தள்ளி நின்றது..
ஆவேசமும் என்னை கிள்ளி எரிந்தது...
அலைகள் கூட என்னை அல்ல மறுத்தது....
அசல்கள் கூட எனக்கு நகல்கள் ஆனது....
அசைகின்ற பொருள்கள் கூட அசைய மறுத்தது....
அசையா பொருள்கள் கூட அசைய வெறுத்தது...
பகல் வந்த பின்னாலும் இரவு துடித்தது...
இரவு வந்த போதிலும் பகல் தடுக்க நினைத்தது....
எல்லா கொடுமை காட்டிலும் என்னை தனிமை கொன்றது...
தனிமை என்னை கொன்ற போதிலும் அவளின் நினைவு என்னை வென்றது...

Saturday, August 20, 2011

இருந்து விட்டதா...


இதயம் இணைந்து விட்டதா....
இல்லை என் இதயம் கனத்து விட்டதா...

என் இதயம் இருண்டு விட்டதா...
அதன் மேல் உன் நிழல் பட்டு விட்டதா ...

என் இதயம் பறந்து விட்டதா..
உன் மேனி என்மேல் பட்டு விட்டதா...

உன் சிரிப்பு கொட்டி விட்டதா...
அதை சேர்த்து என் இதய சுவர் கட்டி விட்டதா....

உன் பார்வை பட்டு விட்டதா...
அதில் என் உயிர் கேட்டு விட்டதா....

தென்றல் என்னை கடந்து விட்டதா..
அதில் உன் கூந்தல் என் இதயத்தை கட்டி விட்டதா..

என் நிழல் என்னை திட்டி விட்டதா..
உன் நிழல் என்னை விட்டு பிரிந்து விட்டதா...

என் உயிர் உன்னுடன் கலந்து விட்டதா ...
இல்லை உன் உயிர் என்னுடன் இருந்து விட்டதா...


என் உயிர் நீ என்று.....

ஒரு பார்வையில் நான் சாகுறேனடி...
மறுபார்வையில் நான் மீல்கிறேனடி...
உன் ஒரு மூச்சு காற்றுக்காக நான் வாழ்கிறேனடி...
மறு பேச்சுக்காக நான் வீள்கிறேனடி...
ஒருநாள் கூட உன்னை பார்க்காமல் நான்
சிறு நாய்குட்டியாக தெரு முழுவதும் உன்னை தேடி நான் அலைகிறேனடி...
மின் அஞ்சல் எனக்கு இல்லையடி...உன் கண் அஞ்சலில் சொல்லிவிடு...
என் உயிர் நீ என்று.....


Wednesday, August 10, 2011

இல்லை... இல்லை...


தென்றலை தேடி பார்த்தேன் அது துளைந்து விட்டதா ? இல்லை... இல்லை...
அது உன் கூந்தல் தீண்டும் போதுதான் தெரிகிறது அது உனது அருகில் இருக்கிறது.....என்று...
என் நிழலை தேடி பார்த்தேன் அது மறைந்து விட்டதா ? இல்லை..இல்லை..
உன் பின்னாலே வந்து கொண்டே இருக்கிறது ...என்று...
என் இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டதா? இல்லை..இல்லை..
அது உன்னை பற்றி சிந்தனையில் ஆழ்ந்து விட்டது ..என்று...
உன் சிரிப்பு சிந்தி விட்டதா? இல்லை ....இல்லை..
சிந்திய தேனை சேகரித்து வைக்கும் எறும்பாக உன் சிரிப்பை என் மனம் சேகரித்து விட்டதே என்று..
என் கண்கள் ஒளியை இழந்து விட்டதா? இல்லை..இல்லை..
அது உன் அழகில் மறைந்து விட்டது என்று.....
என் உயிர் பிரிந்து விட்டதா?இல்லை..இல்லை..
அது உனக்காக இன்னும் என்னுள் இருந்து கொண்டு இருக்கிறது என்று.....


Friday, July 15, 2011

ஆனால்......


பெண்ணே! ஒரே ஒரு வார்த்தை சொல்லி விடு..
அது போதும் எனக்கு ஓர் அளவுக்கு சந்தோஷ படுவேன்...
என்னவென்று கேட்கிறாயா?
நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லுவது கூட பிறகு சொல்லிவிடு...
ஆனால்.
நான் யாரையும் காதலிக்க வில்லை என்றாவது சொல்லுவிடு.....

Tuesday, June 28, 2011

ஊன்றுகோல்


உன் நினைவு கொடிகளுக்காக நான் தரும் ஒரு ஊன்றுகோல்
என் இதயம் ...

Friday, June 24, 2011

உன் சேலையின் மீது....


எப்போதுமே நீ சுடிதாரில் சுற்றித்திரியும் உன்னை...
ஒரு நாள் சேலையில் பார்த்த உடனே எனக்கு கோவம் வந்து விட்டது..
உன் சேலையின் மீது....
உன் அழகை காட்டிலும் சேலையில் அதை விட அழகாக இருப்பதால்......!!!!!!!

தினசரி காலண்டர்....


தினசரி காலண்டரை இருந்து கிழிக்கும் தேதியை கூட இப்போது எடுத்து பத்திர படுத்தி வைக்கிறேன்....
ஏன் தெரியுமா? அது கூட உன்னை ஒவ்வொறு நாளும் பார்க்க போகிறேன் என்று நாயபக படுத்துகிறது ...

நாள் குறிப்பில்


என் நாள் குறிப்பில் நான் எழுதிய...ஒரே வார்த்தை அவள் பெயர்.....

அட்சய பாத்திரமா?

உன் நினைவுகளை அழிக்க பார்கிறேன்...
ஆனால் அது வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது...
உன் நினைவு என்ன? அட்சய பாத்திரமா? இல்லை அதிசய பத்திரமா?

Tuesday, June 21, 2011

சில நொடிகள்


சில நொடிகள் வந்து சென்ற உன் நினைவுகளை
பல நாட்கள் கற்பனை செய்து கொண்டு இருக்கிறேன்.
நெடு நாட்களில்.... நீ சில நாட்களே
உன்னை பார்க்க சில நொடிகளே
தந்து விட்டு செல்கிறாய்....
எப்போது என்னுடன் பலநாட்கள் இருப்பாய்..
அதனால் என்னவோ சில நாட்கள் கூட எனக்கு பல யுகங்கள் ஆக
மாறுகிறது.....

அடைக்கலம்

உன் இடை விடாத பேச்சு...
என் இதயத்தின் துடிப்பை கொஞ்ச நேரம்
தடைபெற செய்தது....
உன் பேச்சுக்கு தடை பெற்றதா?
இல்லை உன் மூச்சுக்கு குடை பிடித்ததா?
எனக்கு மட்டுமே தெரியும் அந்த ரகசியம்?
உன் அன்பிற்கு எப்போதும் என் இதயம்
அடைக்கலம் கொடுபதினால் தானே
இந்த மாற்றம்?

Monday, June 20, 2011

பாராத போர்

எனக்கும் அவளுக்கும் பாரத போர் நடக்கிறதா? பாராத போர் நடக்கிறதா?
தெரியவில்லை..
ஒவ்வொரு முறையும் என் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வென்று
முன்னேறிக்கொண்டே வருகிறாள்......

மறுஜென்மம்


நீ வருவதற்கு முன் ஒரு நொடி கூட ஒரு ஜென்மம் ஆனதடி...
நீ வந்த பின்பு எனக்கு அந்த நொடி கூட மறுஜென்மம் ஆனதடி....

Thursday, June 9, 2011

நிலவு

நிலவு அழகா? இல்லை நீ அழகா?
நீ இல்லாத போது தான் நிலவு அழகு!

Wednesday, May 25, 2011

மரம்

பட்டு போன மரம் கூட இன்று துளிர் விடுகிறது அவள் வருகைக்காக.....

Tuesday, May 24, 2011

அழுக்கு மூட்டை


அழுக்கு மூட்டையில் அழகு இல்லா துணி.....
அவள் வந்த உடனே வெளுக்க தொடங்கின

கடவுளிடம் ஒரு காதலன் கேட்ட கேள்வி?

காதல் எப்படி பிறந்தது?
கவிதைகள் எப்படி புரிந்தது?
காலம் எப்படி முடிந்தது?
காதல் இல்லை எனில் கவிதைகள் புரியாது....!
காதல் இல்லை எனில் காலங்கள் முடியாது.....!
காதல் இல்லை எனில் இப்படி ஒருவன் என்னிடம் கேள்வி கேட்க முடியாது.....!

Saturday, May 14, 2011

காலடி....


உதிர்ந்த பூக்கள்....
உலரா உப்பு....
ஓய்வில்லா அலைகள்....
உணர்வில்லா மணல்கள்...
இது எல்லாம் உன் காலடி படுவதற்காக
துடித்து கொண்டு இருக்கிறது...

Friday, May 6, 2011

அழுகிறது பூமி..

கலங்குகிறது தண்ணீர்...
கரைகிறது செம்மண்...
ஆழ்கிறது வானம்....
அலைகிறது அலைகள்...
தவிக்கிறது மீன்கள்...
அசைய மறுகிறது மரங்கள்...
அழுகிறது பூமி..
அவள் வருகையை எதிர்பார்த்து....

அட்ச்சாணி.....


மாட்டு வண்டியின் சக்கரத்தின் இடையில் மாட்டிய அட்ச்சாணி போல
என் மனது உன் நினைவில் மாட்டிகொண்டு துடிக்கிறது....

Monday, May 2, 2011

மரகொத்தி


மரத்து போன என் இதயத்தில்
மரகொத்தியாக வந்து அடிக்கடி உன் நினைவால் என்னை கொத்தி விட்டு செல்லுகிறாய்......

10நீ


விடிவில்லா இரவு நீ...(1)
விடை இல்லா கேள்வி நீ...(2)
விரிவில்லா ஓடை நீ....(3)
விலை இல்லா பொருள் நீ...(4 )
விசை இல்லா சுழற்சி நீ....(5 )
விதை இல்லா செடி நீ...(6 )
விருப்பம் இல்லா ஆசை நீ...(7 )
விரிவு இல்லா சுருக்கம் நீ....(8 )
விழி இல்லா ஒலி நீ.....(9 )
விளக்கம் இல்லா கரு நீ....(10 )
விதி முழுவதும் என் 10நீ....நீ ..நீ...நீ

Thursday, April 28, 2011

குழந்தை சிணுங்கள்....


காலையில் தடை படாத காகா கதறல்....
இரவில் தடங்கல் இல்லா தவளை கதறல்....
எப்போதும் உன்னை பார்த்த பின்பு குழந்தை சிணுங்கள்....

Wednesday, April 27, 2011

தொடு...தொடு....தொடு.....


என் இதயத்தில் சடு.. குடு... குடு....
நீ வரும் போது எல்லாம் குடு.. குடு... குடு...
உன் கண்ணால் என்னை குத்துவதை தடு.. தடு... தடு......
உன் இதயத்தை எனக்கு கொடு.. கொடு... கொடு....
இரவு நேரங்களில் உன் நினைவில் கிடு... கிடு... ..கிடு......
எப்போதும் உன் காதல் என் நெஞ்சில் வடு.... வடு.... வடு....
நீ சொல்லும் ஒரு வார்த்தையில் என் இதயத்தை தொடு...தொடு....தொடு.....

Monday, April 25, 2011

காய்ந்த சிறாகாய்.......


காற்றாக இருக்கே நீயடி...
காய்ந்த சிறகாய் உன் நினைவில் பறக்கிறேன் நானடி....

Sunday, April 24, 2011

ஜடை.....


உன் ஒரு ஜடை பின்னலில் என் உயிரையும் பின்னி விட்டாய்.....

Saturday, April 23, 2011

தனி ஒரு கிரகம்........


எரி கற்களாக வந்து என் இதயத்தில் விழுந்தவளே.....
இறுகி போன இதயத்தில் இடம் பிடித்தவளே....
எண்ணற்ற நட்சித்திரங்கள் போல் உன் நினைவுகளை என் இதயத்தில் நட்டு வைத்தவளே....
தனி ஒரு கிரகம் வேண்டும்...
அதில் நாம் மட்டும் வாழ நீ அனுமதிக்க வேண்டும்....