Tuesday, March 29, 2011

ஒரு மீட்டர்

கடலின் அளவை அளக்க ஒரு மீட்டர் உள்ளது...
என் காதலின் அளவை அளந்து சொல்லுங்கள்...
மேகத்தில் விட்டதை அளந்து விடலாம்..
என் காதலியின் அன்பை அளந்து சொல்லுங்கள்....
தண்ணிரை கூட பிடித்து விடலாம்..
என்னவளின் நினைவுகளை எதில் பிடிப்பது...

பிழை...

உன்னை பற்றி எழுதும் போது பிழை...
அந்த பிழை கூட உனக்கு பிடிக்கும் என்று சொன்னாய்..
அதற்காக பிழையுடன் எழுதுகிறேன் கவிதை என்னவளுக்காக......

நான் நானாகவே

நான் வரைந்த ஓவியங்களில் எல்லாம் உன் நினைவுகள்....
நான் எழுதும் கவிதைகளில் எல்லாம் உன் வரிகள்...
நான் கனவு காணும் எல்லாமே உன் பிம்பங்கள்...
நான் உச்சரிக்கும் பொழுது எல்லாமே உன் பெயர்கள்...
நான் நானாகவே இருக்கிறேன் என்றால் அது
உன்னாலே...என் இதயத்தை எப்பொழுதும் நிரப்பி கொண்டு இருப்பவள் நீ அல்லவா?

Monday, March 28, 2011

கலசம்

கோயில் கலசம் நீ...
அதில் கற்பகிரகம் நம் காதல்.....

Sunday, March 27, 2011

முடிவு

என் முதல் நீ...
உன் முடிவு நான்....

மூச்சு


என் ஜன்னலில் நீ எனக்கு தென்றல் காற்று ....
நீ என் அருகில் இருக்கும் போது என் சுவாச காற்று நீ...
என் உயிர் போகும் போது என் உயிர் மூச்சு நீ.....

Friday, March 25, 2011

நீ

இனிமையின் நாட்டம் நீ இருக்கும்...போது..
தனிமையின் வாட்டம் நீ இல்லாத போது..

ஒத்தயடி பாதை


ஒத்தயடி பாதையல....
ஒய்யாரமா போன என்னை...
ஓர கண்ணால பார்த்த புள்ள...
என் உசுர இழுத்துகிட்டு ஓடோடி போன புள்ள..
ஒரு வார்த்தை சொல்லி பொடு.....
என் உசுரை எனக்கு கொடுத்து பொடு ....

Tuesday, March 22, 2011

கட்டுமரம்


அடிக்கடி தடுமாடுகிறேன்...அவள் என்னை பிடித்து கொள்ள...

அவளோடு நான் கையை பிடித்து கொண்டு நடக்கும் போது இந்த உலகமே என்னோடு வருவது போல இருக்கிறது...

அவள் என் கையை விடும் போது இந்த உலகம் என்னை விட்டு செல்வது போல இருக்கிறது...

எனக்கு மட்டும் கடவுள் வரம் கொடுத்தால் என் உடம்பு முழுவதும் கண்கள் வேண்டும் என்று கேட்பேன்...
ஏன் என்றால்?

என் பார்வை முழுவதும் அவள் மேல் இருக்க..

காற்று கூட அவள் பெயர் சொல்ல வேண்டும்...

அவளை தாங்கும் கட்டுமரமாக நான் இருக்க வேண்டும்...

நான் (கட்டையில்) போன பின்னர் அவள் வர வேண்டும்....

Monday, March 21, 2011

காதல் சுனாமி


காதல் செய்து பழகி கொண்டேன்...
கற்பனையில் வாழ்ந்து விட்டேன்....
கடல் அலையை போல் மாறி விட்டேன்...
அலை போல வந்தாலும் கரை போல போய் விடுகிறாள்...
கரைந்து விடுகிறேன் உன் பார்வையால்...
ஒருநாள் சுனாமி போல் வந்து உன்னை தூக்கி செல்வேனடி.....உன் சம்மதத்துடன்,,,,,,

இதய பறவை


என் இதய பறவையின் முட்டையில் நீ....
அதில் கருவாக நம் காதல்...

ஒரு வரி


இரு முகவரி ஒன்றானது...காதலில்...
இருவரும் ஒரு வரி ஆனார்கள்....கல்யாணத்தில்...

உருப்பட மாட்டே

வகுப்புல வாத்தியார் சொல்லுவார்..நீ உருப்பட மாட்டே...
விட்டுல அம்மா சொல்லுவாங்க நீ எப்படி வாழ்கையில் உருப்பட போற...
சண்டையல அப்பா சொல்லுவார் நீ உருபடவே மாட்டே....
காதலி சொல்லுவாள் நீ எப்படா நீ உருபடுவ...
என்ன கொடுமை சார்..இது...

பொய்...மெய்....


வாடாத பூ...
வற்றாத ஆறு...
வயது ஆகாத மனிதன்...
காற்று இல்லாத பூமி...
கடவுள் இல்லாத கோவில்...பொய்...பொய்...
காலம் முழுவதும் உன் காதலுகாக நான்......மெய்...மெய்....

அவள்....


விமானத்தில் இதயம்....என் அருகில் அவள்....

Sunday, March 20, 2011

ஆசை

ஊமைக்கும் ஆசை...உன்னுடன் பேச....
செவிடனுக்கும் ஆசை....உன் சிரிப்பை கேட்க...
குருடனுக்கும் ஆசை...உன் அழகை பார்க்க...
எனக்கும் ஆசை..உன்னுடன் வாழ....

மின்மினி

என் இதயகூட்டில் அவளின் நினைவுகளை அடைத்து வைத்தேன் மின்மினி பூச்சிகளாக

காதல் குதுரை


மனப்பாடம் செய்தேனடி...உன்னிடம் பேச....
உன்னை பார்த்த பின்பு என்னையே மறந்தேனடி...
நீ சிரிக்கும் போது கூட என் இதயத்தில் சில்லரையாக விழுகதடி....
காயம் இருக்கும் இதயத்தை கூட உன் சொல் காய வைகுதடி...
கடிகாரத்தில் நொடி முள் கூட உனக்காக மணி முட்களாய் ஆகுதடி..
கடிவாளம் போட்டாயாடி நம் காதல் குதுரைக்கு...

Friday, March 18, 2011

பூசாரி...ஆசாரி...

அவள் அன்புக்கு நான் பூசாரி...
என் வம்புக்கு அவள் ஆசாரி...

என் மனைவி


ஒரு வேலை சாப்பாடு...
ஒரே ஒரு சேலை...
எப்பையாது ஒரு படத்துக்கு போறது...
ஒரே ஒரு மொளம் பூ....
எப்பயும் நான் கஷ்ட படுறப்ப அவள் மடியில் நான்...
இப்படி இருக்கறப எனக்கு எதுக்கு காரு, பங்களா...
நான் தான் உலத்திலே பெரிய பணக்காரன்....
குடுசை விட்டுல கூட எனக்கு என் மனைவி கூட இருக்கறது...
இன்னொரு உலத்துல இருகிறதுக்கு சமம்......

என் கண்ணீரில் அவள்....


சூரியன் குளிர்ச்சி.....சந்திரன் வெப்பம்....
ஆகாயம் அசிங்கம்....வானவில் அழகு இல்லை....
நான் ரொம்ப அழகாக இருக்கேன்...இப்படி எல்லாம் சொன்னாலும்
நீ நம்பி விடுகிறாய்...அப்படி என்றால் என்னை அந்த அளவுக்கு உனக்கு புடிக்குமா?
என் கண்ணீரில் அவள்....

கருவாடு

2011 கவிதை......
கருவாடு கூட நீ தொடும் போது எட்டி குதிக்கிறது....
சுடுகாடில் கூட இருக்கும் பிணம் கூட உன் அழகால் எட்டி பார்கிறது...
கொதிக்கிற தண்ணீர் கூட குளிர் ஆகிறது நீ குளிக்கும் போது.....

காதல் கடிதம்


காதல் கடிதம்......................................
..................................................................
..................................................................
..................................................................
இந்த புள்ளி கூட உனக்காக ஒரு கவிதை படைக்கும்..
முற்று புள்ளி கூட உன்னகாக எழுதும் போது முடிவில்லாமல் செல்கிறது...

வற்றாத ஊற்று...


வறண்டு போன பாலை வனத்தில் வற்றாத ஊற்று...
அவள் வந்த பின்பு.....

நீ....

உன் ஓர சிரிப்பில் என் உசுரை தலை சிவுகிறாய்...
உன் ஓர கண்களால் என் இதயத்தை பாறை கற்களாக மாற்றுகிறாய்...
உன் நெற்றியில் விழும் முடி கூட என்னை தூக்கில் போடுதடி....
என் தூக்கத்திலும் நீ....என் துக்கத்திளும் நீ...
நான் துயில் எழுகையிலும் நீ.....
துவண்டாமல் இருகிறேனடி உன்னால்...

கிணற்று கயிராக.....

உன் மனதில் இருபது தெரியாமல் தவிகிறேனடி..கிணற்று
கயிராக.....

பெருமை...

அவளிடம் எனக்கு புடித்தது..அவளின் கருமை...
அவளின் அன்பு அதை விட அருமை...
அதனால் அவள் மீது நான் வைத்து இருந்த காதலினால் எனக்கு ரொம்ப பெருமை...

நான் உன்னுடன்


விண்மீன்கள் தேவை இல்லை...
உன் கண்மணிகள் போதுமடி...
எனக்கு கடல் அலைகள் தேவை இல்லை...
உன் சிரிப்பு அலைகள் போதுமடி...
எனக்கு நிசப்தம் வேணாமடி...
உன் கொலுசின் சப்தம் போதுமடி... எனக்கு ஆகாயம் வேணாமடி..
நீ இருக்கும் இந்த பூலோகம் போதிமடி...
எனக்கு பொன் மணிகள் வேணாமடி...
இந்த பெண் மேனி போதுமடி...
உன்னுடன் இருந்தால் போதாதடி...என் உயிருடன் கலந்தால் போதுமடி...
ஒரு வருடம் தேவை இல்லை ...நான் உன்னுடன் இருக்கும் இந்த ஒரு நிமிடம் போதுமடி....

காலடி

உன் ஒரு வார்த்தையில் இந்த உலகம் என் காலடியில்....
உன் மறுவார்த்தையில் இந்த உலகத்தில் காலடியில் நான்....

பாவ மன்னிப்பு


சொர்க்கம் இருக்கிறது....அவளின் சிரிப்பில்...
நரகம் இருக்கிறது அவளின் அழுகையில்...
நான் செய்யும் தப்புகள் அவளின் கண்ணீரால் பாவ மன்னிப்பு கொடுத்து விடுகின்றன....
அதனால் என்னவோ அவளின் சிரிப்புக்காக ஒரு போதும் தவறு செய்வது இல்லை....ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் ஆயிரம் காதல் இருபதினால் தான் தவறுகள் அதிகமாக நடப்பதில்லை.....

Thursday, March 17, 2011

நீங்கா நினைவுகள்....

என்னை விட்டு நீ நிங்கினாலும்....
எப்போதும் நிங்காமல் இருப்பது உன் நீங்கா நினைவுகள்....

நீ....நான்...


நீ நிற்கும் இடத்தில் நிழல் நான்...
நான் விடும் மூச்சு நீ...
நீ சிரிக்கும் போது அந்த சிரிப்பாக நான்...
நான் அழும்போது கண்ணீராக நீ....
என் இதயத்தில் துடிப்பு நீ....
உன் உயிர் நாடியாக நான்....
என் உணர்வாக நீ .....
உன் உறவாக நான்...

Tuesday, March 15, 2011

கடிதம்


எழுதாத பேனா கூட உன் பேரை எழுதும் போது எழுதுகிறது......உன் மேல் நான் வைத்திருக்கும் காதலை போல....
கடிதம் கூட நீள்கிறது உனக்கு கடிதம் எழுதும் போது.....
கையெழுத்து கூட உனக்காக அழகாகிறது உன்னை பற்றி எழுதும் போது...
உன் விலாசம் எழுதும் போது மறந்தேனடி என் விலாசத்தை.....

உன் சிரிப்பு

உன் சிரிப்பில் ஒட்டறை சக்கரம் ஓடுதடி...
நீ பார்த்த ஒரு நிமிடம் என் இதயம் ஊஞ்சலில் ஆடுதடி...
நீ பேசிய வார்த்தை மேகத்தில் வெடிகளாய் வெடிக்குதடி....
நீ தொட்ட இந்த மேனி மோட்சம் அடைந்ததடி.....
நீ அருகில் இருப்பதால் இந்த ஜென்மம் போதாதடி....

கனவு


கனவுகள் கழைந்து விடமால் பார்த்து கொள்ளுகிறேன்.... அதில் நீ வரும்போதும் மட்டும்....

Friday, March 11, 2011

சுனாமி

ஜாதி மதம் தெரியாது....
சமத்துவம் இதற்கு புரியாது...
பணம் காசு கொடுத்து நிறுத்த முடியாது...
ஏழை, பணக்காரன் என்று இதற்கு தெரியாது...
நல்லவன், கேட்டவன் இதற்கு தேவை கிடையாது.....
ஆனால் தினம் ஒரு மாற்றம் இதனால்..... இறைவனிடம் கேட்டேன்?
மனிதனை படைத்தது விட்டு...மறுகணமே கொள்ள ஆசையா...அதற்கு எதற்கு படித்தாய் மனிதனை....குடிபதற்கு கொடுத்தாய் தண்ணீர்....அதை கொலை செய்யவும் பயன் படுத்துகிறாய்....ஒரு வேலை இப்படி யோசித்து விட்டாயோ...மக்கள் தொகை பெறுகிறது அதற்க்கு இப்படி ஒரு பாதையில் வந்து விட்டாயோ....சொல்லி இருந்தால் கட்டுபாட்டில் வைத்து இருப்போம்......இல்லை என்றால் கட்சி கூடங்கள் பெருகி விட்டது என்பதற்காக கட்சி இடம் கணிசமாக ஒரு தொகை
வாங்கி விட்டாயோ.... இல்லை மக்கள் மிகவும்
கஷ்ட்டபடுகிறார்கள் என்று கருணை கொலை செய்ய வந்து விட்டாயோ... எது இருந்தாலும் இந்தியாவிற்குள் வந்து விடாதே...இங்கு நல்ல இதயங்கள் அதிகம்....

நாள்காட்டி


என் இதயத்தில் ஆணி அடித்துவிடு...அவள் நினைவுகளை நாள்காடியாக மாட்டி விட்டு எங்கேயோ போய் விட்டால்....இப்போது தினமும் அவளின் நினைவுகள்

ஊமை


ஒரு வார்த்தை, ஒரு நிமிடம், ஒரு பூமி, ஒரு இரவு, ஒரு பகல், ஒரு நட்சத்திரம், ஒரு சூரியன், ஒரு ஆகாயம், ஒரு வானவில், இது எல்லாம்
இப்போது ஓடி ஒழிந்து கொண்டது....என்னவளின் அழகை பார்த்து....இப்போது நான்மட்டும் ஊமையாக.....சுற்றி திரிகிறேன்.....

Friday, March 4, 2011

என் இதயம்


அவளின் கொலுசு கூட
என்னை பார்த்து சிரிக்கின்றது...
அவளின் கம்மல் கூட என்னை பார்த்து கவி பாடுகிறது....
அவளின் நெற்றியில் இருக்கும் பொட்டு கூட
என்னை பார்த்து நடனம் ஆடுகிறது....
அவளின் கழுத்தை இறுகி பிடித்து கொண்டு
முத்தமிட்டு கொண்டு இருக்கிறது முத்துமணி....
அவளின் ஆடை கூட அவளை கட்டி பிடித்து கொண்டு
என்னை பார்த்து நக்கல் அடிக்கிறது....
அதற்கு எல்லாம் தெரியாது...
அவளிடம் பத்திரமாக இருக்கிறது
என்றும் மாறாத என் இதயம் என்று.....

Thursday, March 3, 2011

அவளின் நினைவு


என் இமைகளில் என்னவளை பிடித்து விட்டேன்...
என் இதயத்தில் அவளை அடைத்து விட்டேன்....
என் உயிரில் அவளிடம் நான் கலந்து விட்டேன்...
என் உணர்வில் அவளை அனுப்பி வைத்தேன்...
என் உள்ளத்தில் என்றுமே அவளின் நினைவுகளை நிரப்பி வைத்தேன்...

ஒரு ஜென்மம்


கவிஞன் ஆக்கிய அவள்.....
என் கவிதை முழுவதும் அவளின் கண்ணீர்.......
உன்னை பார்த்த முதல் நாளே என் நாடி நின்று விட்டது....
உன் பார்வை பட்ட உடனே என் இதயம் மக்கி விட்டது...
இரு ஜென்மம் கொடுத்து இருந்தால் இருபெனடி உன்னோடு....
ஒரு ஜென்மம் கொடுத்ததினால் உன்னோடு இருக்க ஒரு வாய்ப்பு கொடுத்து விடு.....
இல்லை என்றால் உன் அருகில் என்னை புதைக்க ஒரு இடம் தந்து விடு....

தினம்


தினம் காலை ஒரு புதிய சூரியன்....
தினம் காலை ஒரு புதிய நாள்....
தினம் காலை ஒரு புதிய நிமிடம்....
தினம் அவளை பார்க்கும் ஒரு விநாடி எனக்கு தினமும் பிறந்த நாள்.....

ஒரு நொடி......ஒரு யுகம்


இதோ அவள் உடன் இருக்கும் போது என் மனதில் ஆயிரம் கேள்விகள் கேட்க தோன்றுகின்றன....ஆனால் அவளின் கண்களை பார்க்கும் போது அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடுகின்றன.....அவளை விட்டு பிரியும்...போது...ஒரே ஒரு வார்த்தை சொல்லுவாள்...
என்னவென்று தெரியுமா?
உங்கள் அருகில் இருக்கும் போது தான் நான் அழகாக இருக்கிறேன்... என்று...அதற்கு நான் சொல்லுவேன்...நீ எப்பயும் என் அருகில் இருபதினால் தான் எனக்கே நான் அழகாக தெரிகிறேன்... என்று...அவளின் ஒரே ஒரு சிரிப்பு போதும்.....ஒரு யுகம் கூட ஒரு நொடி தான்...ஆனால் நான் இல்லாமல் அவளுக்கு ஒரு நொடி கூட ஒரு யுகம் தான்.....காதல் இருபதினால் என்னவோ ஆங்காங்கே கடவுளும் கல்லாக இருக்கிறான்....

சிறியது


என்னவளின் அன்பை விட இமயமலை சிறியது....
என்னவளின் சிரிப்பை விட கடல் அலை சிறியது...
என்னவளின் அழுகையை விட அருவிகள் சிறியது...
என்னவளின் கூந்தலை விட மேகங்கள் சிறியது...
என்னவளின் காதலை விட இந்த பூமியில் எது எல்லாம் சிறந்தது...

Wednesday, March 2, 2011

கடல் அலைகள்


அவள் போன மணல் தடத்தில் நான் போக ஆசைப்பட்டேன்....
அதற்கு முன்னால் அவளின் காலடி தடத்தை கடல் அலைகள் காதல் வசப்பட்டு தன்னுள் இழுத்து கொண்டது....

நீங்கா இடம்



நீ நடக்கும் போது உன் நிழல் ஆக வேண்டும்...
நீ சிரிக்கும் போது உன் சிரிப்பாக வேண்டும்...
நீ நெருங்கும் போது உன் மூச்சாக வேண்டும்...
நீ சாயும் போது உன் தோல் ஆக வேண்டும்...
நீ குளிக்கும் போது உன்னை தொடும் நீராக வேண்டும்...
நீ அழும் போது உன் கண்ணீர் ஆக வேண்டும்....
நீ இருக்கும் இந்த உலகில் உன்னை சுற்றும் பூமி ஆக வேண்டும்...
நான் இருக்கும் உன் இதயத்தில் எனக்கு நீ நீங்கா இடம் தர வேண்டும்...

Tuesday, March 1, 2011

இப்படிக்கு என் தாய்

அவளின் கட்டை விரலை பிடித்து கொண்டு நடந்து வந்த நான்....
இப்போது என் கட்டை விரலை பிடித்து கொண்டு நடக்கிறாள்.....
என் கட்டை விரல் அவளுக்குதான் சொந்தம்....
அவளால் தான் கிடைத்தது இந்த சொந்த பந்தம்.....இப்படிக்கு என் தாய்......

மாயமாய் மறைந்து விடும்


பருக்கை இறங்க வில்லை... படுத்தால் உறங்க வில்லை... தாகம் எடுக்க வில்லை.... தவிக்கிறேன் உன்னை பார்த்த நாள் முதல்..... மருந்தாக ஒரு பார்வை பார்த்துவிடு....இது எல்லாம் மாயமாய் மறைந்து விடும்.....எனக்கு....

ஒரு நண்பர்களை தாருங்கள்


எனக்கு ஒரு கோடி வேண்டாம்...
ஒரு நண்பர்களை தாருங்கள் அது போதும் .....
நான் சொல்லுவேன் கோடான கோடி வணகங்கள்....