Friday, March 4, 2011

என் இதயம்


அவளின் கொலுசு கூட
என்னை பார்த்து சிரிக்கின்றது...
அவளின் கம்மல் கூட என்னை பார்த்து கவி பாடுகிறது....
அவளின் நெற்றியில் இருக்கும் பொட்டு கூட
என்னை பார்த்து நடனம் ஆடுகிறது....
அவளின் கழுத்தை இறுகி பிடித்து கொண்டு
முத்தமிட்டு கொண்டு இருக்கிறது முத்துமணி....
அவளின் ஆடை கூட அவளை கட்டி பிடித்து கொண்டு
என்னை பார்த்து நக்கல் அடிக்கிறது....
அதற்கு எல்லாம் தெரியாது...
அவளிடம் பத்திரமாக இருக்கிறது
என்றும் மாறாத என் இதயம் என்று.....

No comments: