
அடிக்கடி தடுமாடுகிறேன்...அவள் என்னை பிடித்து கொள்ள...
அவளோடு நான் கையை பிடித்து கொண்டு நடக்கும் போது இந்த உலகமே என்னோடு வருவது போல இருக்கிறது...
அவள் என் கையை விடும் போது இந்த உலகம் என்னை விட்டு செல்வது போல இருக்கிறது...
எனக்கு மட்டும் கடவுள் வரம் கொடுத்தால் என் உடம்பு முழுவதும் கண்கள் வேண்டும் என்று கேட்பேன்...
ஏன் என்றால்?
என் பார்வை முழுவதும் அவள் மேல் இருக்க..
காற்று கூட அவள் பெயர் சொல்ல வேண்டும்...
அவளை தாங்கும் கட்டுமரமாக நான் இருக்க வேண்டும்...
நான் (கட்டையில்) போன பின்னர் அவள் வர வேண்டும்....
No comments:
Post a Comment