கண் தெரியா தென்றல் கூட
உன்னை தொட இடம் தருகிறாய்...
கண்ணுக்கு தெரிந்த என்னை மட்டும்
நெருங்கும் போது முறைக்கிறாய்....
நீ பார்த்த எல்லா ஆண்களை விட
நான் நிகர் இல்லை....
நான் பார்த்த எல்லா பெண்களும்
உனக்கு நிகர் இல்லை...
எல்லா கவிதைக்கும்
ஒரு பெண்தான் காரணம்...
நான் எழுதும் இந்த கவிதைக்கு
நீதானே சாதனம்....
உன் ஒரு வார்த்தைக்கு
இந்த உயிர் எல்லாம்
ஒரு
சாதா ரணம்.....
உன்னை போல் நான் அழகாக
ஆக முடியமா?
தெரியவில்லை....
ஆனால் என் இதயத்தை
உனக்காகவே அழகாக்க
முடியமே!
காதலுக்கே கண் இல்லை என்பார்கள்...
ஆனால் பெண்ணே....
என்
கண்ணே.............
உன் காதல் தானடி....
No comments:
Post a Comment